மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி !
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி !
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா ?
குழியினுள் வாழ்பவரே
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா ?
குழியினுள் வாழ்பவரே
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள் ஒருதரம்
உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்கு கின்றோம்
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்கு கின்றோம்
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொருசத்தியம் செய்கின்றோம்
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் எங்கே எங்கே
ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம் எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள் ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா ? குழியினுள் வாழ்பவரே
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
கானவரிகள்:- புதுவைரத்தினதுரை
பாடியவர் :- வர்ணராமேஸ்வரன்