புதன், 20 பிப்ரவரி, 2013

வீர வணக்கம் கேணல் ரூபன், லெப் கேணல் சிரித்திரன் இருவரின் வீர வணக்கத்தோடு கட்டார் வாழ் தமிழ் உறவுகள்....

 சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான
கேணல் ரூபன்
லெப்.கேணல் சிரித்திரன்
ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது...............தமிழர் ஒருங்கிணைப்பு குழு டோகா கட்டார்.......

திங்கள், 11 பிப்ரவரி, 2013

தீயினில் எரியாத தீபம் முருகதாசனின் வீர வணக்கத்தோடு கட்டார் வாழும்தமிழர்கள்


  1. தீயினில் எரியாத தீபம் - வர்ணகுலசிங்கம் முருகதாசன்
    அவர்களின் நினைவில் 4'ம் அண்டு வீரகாவிய நினைவு
    நாள் 12.02.2013...
    *********************************************
    தீயினில் எரியாத தீபம்

    ... வர்ணகுலசிங்கம் முருகதாசன்

    Varnakulasingham Murugathasan

    டிசம்பர் 2, 1982 - பெப்ரவரி 12, 2009..........தமிழீழ ஒருங்கிணைப்புக் குழு டோகா கட்டார்.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

வீர வணக்கம் கௌசல்யன் உட்பட 5வேங்கைகளின் நினைவுகளோடு தமிழர் ஒருகினைப்புக்குழு டோகா கட்டார்


தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து எட்டாவது ஆண்டாகியும். இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது. எமது மாவீரர்களுக்கு எமது வீர வணக்கம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்