வெள்ளி, 12 ஜூன், 2015

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே



மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி !


வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி !


விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!


இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!











தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே


தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே


இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா ?


குழியினுள் வாழ்பவரே


இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா ?


குழியினுள் வாழ்பவரே


தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்


உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்




அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்


அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்


எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்


எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்


ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே


மறுபடி உறங்குங்கள் ஒருதரம்


உங்களின் திருமுகம் காட்டியே


மறுபடி உறங்குங்கள்


தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே


வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்கு கின்றோம்


வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்கு கின்றோம்


உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொருசத்தியம் செய்கின்றோம்


உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்


வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்





சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது


சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது


எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது


எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது


எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் எங்கே எங்கே


ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்


ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்


ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே


மறுபடி உறங்குங்கள்






தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே


உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்


உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்


அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்


அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்


உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்


தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்


தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்


எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம் எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்


எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்


எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்


ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே


மறுபடி உறங்குங்கள் ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா ? குழியினுள் வாழ்பவரே


தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே






கானவரிகள்:- புதுவைரத்தினதுரை


பாடியவர் :- வர்ணராமேஸ்வரன்



















தலைவனின் காலத்தில் நாம்



“வெற்றிகளைப் போராளிகளுக்குக் கொடுங்கள், தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்” எனத் தளபதிகளுக்குச் சொல்லவார்.

“ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள், மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்” என்று கூறுவார். ஒரு சண்டை பின்னடைவைச் சந்தித்தால் தவறுகளை ஆராயும் போது முதலில் தன்னிலிருந்துதான் தொடங்குவார். மற்றவர்களிற் பிழைகளைப் போடுவது தலைவர் விரும்பாததொன்று.
இலட்சியத்தையும் – அதற்கான சாவையும் தலைவர் இரண்டு கண்களைப் போலவே போற்றுவார்.
“உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காகச் செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும்” என்று அடிக்கடி கூறுவார்.
“இப்படிப்பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் – உயர்ந்தவர்கள்” என்பார். “நானும் உண்மையானவனல்லன்” என்று தன்னைப் பற்றியுங் கூறுவார்.
அவரது இக்கூற்றுக்கள் மாவீரர்களை முதன்மைப்படுத்துவதையும் – இலட்சியத்தின் மீதான உறுதிப்பாட்டையுமே காட்டுகின்றன. தலைவர் பிரபாகரன் அவர்கள் அற்புதமான இராணுவ வல்லுநரென்பதை உலகமே ஏற்றுக்கொண்டுவிட்டது. அடிமைப்பட்டுத் தலைகுனிந்து கிடந்த தமிழ் இனத்திற்கு வீரத்தையூட்டித் தலைநிமிரவைத்த வரலாற்றுப்பெருமை தலைவரை மட்டுமே சாரும்.
இன்று, தமிழரின் தன்னிகரில்லாத் தலைவனாக அவர் உயர்ந்துள்ளார். அவரின் காலத்தில் நானும் வாழ்கின்றேன்