வெள்ளி, 16 ஜனவரி, 2015

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் கட்டார் வாழும் தமிழ்ர்களால் நினைவு கூறப்பட்டது...!



தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் கட்டார் வாழும் தமிழ்ர்களால் நினைவு கூறப்பட்டது...!














கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
லெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்)
மேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை)
கடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்)
கடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் நாயகன் (சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை)
கடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்)

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு டோகா கட்டார்

செவ்வாய், 6 ஜனவரி, 2015


மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவு வணக்கநாள் டோகா கட்டார்.....!

06.01.2015

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று கட்டாரில் வாழும் தமிழர்களால் நினைவு கூறப்பட்டது இதில் நூற்றுக்கும் மேல்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு டோகா கட்டார்.